Tuesday, May 4, 2010

விஜயின் 50வது படமான சுறாவின் கதை.


கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"

Saturday, March 27, 2010

அஜீத் – கெளதம் மேனன் கூட்டணில் ‘காக்கி’!

அஜீத்தின் 50வது படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் கெளதம் மேனன், “துப்பறியும் ஆனந்த் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது வேறு புராஜக்ட். 1920ம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் ஒரு துப்பறியும் கதைக்காக இந்தத் தலைப்பை பதிவு செய்திருக்கிறேன். கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரிடமும் சொல்லியிருக்கிறேன்.

அஜீத் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. போலீஸ் என்றுதான் முதலில் பெயர் சூட்ட நினைத்தோம். அது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால் காவல் அல்லது காக்கி ஆகிய தலைப்புகளில் ஒன்றை வைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் முடிவு செய்யவில்லை என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் காக்கி என்ற பெயரில் சரத்குமார் ஒரு படம் ஆரம்பித்து கால்வாசி ஷூட் செய்த நிலையில் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தியில் வெளியான ‘அர்த் சத்யா’வை தியாகராஜன் ‘காவல்’ என்ற பெயரில் படமாக்கினார். அதேபோல ‘போலீஸ்’ என்ற தலைப்பில் தன் மகன் பிரசாந்தை வைத்து நான்கைந்து வருடங்களாக இயக்கி வருகிறார் அவர்.

எனவே இந்தத் தலைப்புகள் அத்தனை சுலபத்தில் கெளதம்- அஜீத்துக்கு கிடைக்குமா தெரியவில்லை.

ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக காக்கியை உருவாக்குகிறார்களாம்.

கடந்த முறை அசல் படத்தில் இணை இயக்குநராகவும் பொறுப்பேற்றிருந்தார் அஜீத். இந்தப் படத்திலும் அது தொடருமா… கெளதம் மேனன் அனுமதிப்பாரா? பார்க்கலாம்!

வாலிபன்


விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு, முன்னணி டெக்னீஷியன்களுடன் கைகோர்ப்பதில் குறியாக இருக்கிறார் சிம்பு.

இப்போது, தான் இயக்கும் வாலிபன் படத்துக்கான வேலைகளைத் துவக்கியுள்ள சிம்பு, இதன் ஒளிப்பதிவுப் பொறுப்பை பிசி. ஸ்ரீராமிடம் ஒப்படைக்க விரும்பியுள்ளார். ஆனால் தனக்குப் பிடித்த இயக்குநர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றுவதில் குறியாக இருக்கும் பிசி, சிம்புவுக்கு முதலில் பிடிகொடுக்கவில்லையாம்.

உடனே, பிசி. ஸ்ரீராம் மீதான தனது அபிமானத்தை பல வழிகளிலும் காட்ட முயல, விஷயம் தெரிந்த பிறகு கதை கூட கேட்காமல் வாலிபன் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளார் பிசி. ஸ்ரீராம்.

ஏற்கெனவே விக்ரம் குமாரின் ‘24′ படத்துக்கு கமிட்டாகியிருந்தார் பிசி. அந்தப் படம் டிராப்பாகி விட்டதால் அதே தேதிகளை சிம்புவுக்கு கொடுத்துள்ளாராம்.

வாலிபன் படத்தை எஸ்எஸ் சக்ரவர்த்தி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தன்னை வைத்து காளை என்ற படத்தை எடுத்து நஷ்டப்பட்ட சக்கரவர்த்திக்கு, அந்த நஷ்டத்தை வாலிபன் மூலம் சரி கட்டித்தருவதாகக் கூறியுள்ளாராம் சிம்பு.

இந்தியா டுடே டாப் 50ல் ரஜினி – தமிழக லிஸ்ட்டில் கமல்!

ஆண்டுதோறும் இந்தியா டுடே வெளியிடும் ‘இந்தியாவின் 50 அதிகாரம் மிக்க மனிதர்கள்’ பட்டியலில் ரஜினி இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு அளிகக்கப்பட்ட அதே 28வது இடம் இந்த ஆண்டும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சன் குழும இயக்குனர் கலாநிதி மாறன், ஆஸ்கர்- கிராமி விருதுகள் வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அப்போல்லோ பிரதாப் ரெட்டி, ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ள இதர பிரபலங்கள்.

தமிழக அளவில் முதல் 10 முன்னணி பிரமுகர்கள் பட்டியலில் கமல்ஹாஸன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ரஜினியை டாப் 50 பட்டியலில் தேர்வு செய்துள்ளதற்கு இந்தியா டுடே இப்படி விளக்கம் தெரிவித்துள்ளது:

“ஏனெனில், இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் எந்திரன் படத்தில் நடித்து வருகிறார்.

கோலிவுட் பாராட்டு விழா, ஆர்ப்பாட்டங்களில் திரைப்பட நடிகர்கள் பங்கேற்க வற்புறுத்தப்படுவதற்கு எதிராக நடிகர் அஜீத் கொடுத்த எதிர்ப்புக் குரலுக்கு இவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். திரைப்படத் துறையினர் தெரிவித்த எதிர்ப்பு எடுபடவில்லை.

ஏனெனில், ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சிவாஜிக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ 26 கோடி என்கிறார்கள்..”

25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்


பின் வரும் செய்தியைப் படித்துவிட்டு ஏப்ரல் ஃபூல் சமாச்சாரமோ என்று நினைத்து விட வேண்டாம். நிஜமான சினிமா மேட்டர்தான்!.

சினிமா வரலாற்றில் முதல்முறையாக 25 வேடங்களில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு!

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘உலகம்’ என்று பெயரிட்டுள்ளனர். ஆதம் பவா என்பவர் இயக்கும் இந்தப் படம் வடிவேலுவின் திரைவாழ்க்கையின் முக்கிய மைல்கல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக மொத்தம் 175 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமான இதில் 10 கதாநாயகிகள் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம்.

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் உதவியுடன் வடிவேலு விதவிதமான கெட்டப்புகளில் தோன்றவிருக்கிறார் இந்தப் படத்தில். அதில் ஒரு கெட்டப் நித்யானந்தா வேடம் என்றால் இப்போதே சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறதல்லவா (அந்த கெட்டப்புக்கு மட்டும் நிஜ ரஞ்சிதாவையே ஜோடியாக்குவார்களோ!!).

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகுமாம். 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷூட்டிங்காம்.

மேலும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இந்தப் படத்தை இடம் பெறச் செய்யவும் முயற்சிகள் நடக்கிறதாம்.

ஏப்ரல் 14ல் சுறா-சிங்கம் மோதல்!


வரும் ஏப்ரல் 14 சித்திரைத் திருநாளையொட்டி விஜய் நடித்த சுறா மற்றும் சூர்யா நடித்த சிங்கம் படங்கள் வெளியாகின்றன.

விஜய் நடித்த சுறா படத்தை வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் வெளியிடுவதாக முதலில் திட்டமிட்டிருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் எப்படியாவது இந்தப் படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்று விஜய் விரும்பினாராம்.

அதே சமயம், ஏப்ரல் 14-ம் தேதி சிங்கம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தது சன். இந்தப் படத்தின் உரிமையையும் சன்தான் வாங்கியுள்ளது.

இதுவரை ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் பண்ணி வந்தது சன். இந்த முறை சுறா, சிங்கம் இரு படங்களையும் ஏப்ரல் 14-ம் தேதியே வெளியிட்டுவிட தீர்மானித்துள்ளனர்.

இதனால் சுறா – சிங்கம் இரு படங்களுமே ஒரே நாளில் வெளியாக உள்ளன.

இது விஜய் – சூர்யா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. இன்னொரு பக்கம் எந்தப் படத்துக்கு நல்ல தியேட்டர்களைப் பிடிப்பது என்பதிலும் லேசான உரசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Sunday, January 10, 2010

வேட்டைக்காரன் ஸ்பெஷல்....(ரசித்தவை)

ஆண்டவா வேட்டைகாரனாவது ஒரு வாரம் ஒழுங்க ஓடணும் !!!


விஜய் ரசிகன்(கார்க்கி அண்ணா மாதிரி) : தலைவா..தலைவா..வேட்டைக்காரன் படம் பார்த்து முதல் காட்சியிலே 500 பேர் செத்துட்டாங்களாம்...

விஜய் : வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சுடோய்...

*******************************

வேட்டைக்காரன் ரீ-மிக்ஸ் பாடல்:

போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரெய்லர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்த வீடு போய் சேர மாட்ட...

*******************************

காதலன் : ஐ லவ் யூ
காதலி : நான் உன்ன லவ் பண்ணலைன்னா?
காதலன் : இப்படியே பஸ் பிடிச்சு 'வேட்டைக்காரன்' படம் ரிசர்வ் பண்ண போயிடுவேன்.
காதலி : எனக்காக எப்போ நீ உயிரவே கொடுக்க முடிவெடுத்தியோ, இதுக்கு மேல என் காதலை மறைக்க விரும்பலை. ஐ லவ் யூ டூ!

*******************************

(இந்த கெட்டப்பில் நான் அனுஷ்கா-வைவிட அழகா இருக்கேன்ல..)

வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸில் கே.எஸ்.ரவிக்குமார்..

என்ன பண்ணாலும் விஜய் மாதிரி வர முடியாது..

ரசிகனின் குரல் அதுவும் சரிதான்..

யாரும் விஜய் மாதிரி வர முடியாது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

*******************************

டாக்டர் என் பிள்ளை பிழைச்சுக்குவானா?
விஷம் குடிச்சாக்கூட பிழைக்க வைச்சிருக்கலாம்...பையன் ரொம்ப தெளிவா வேட்டைக்காரன் டிரெய்லர் தொடர்ந்து 100 தடவை பார்த்து இருக்கான்..

*******************************

இவ்வளவு சொல்லியும் நீங்க சிரிக்கவில்லை என்றால் கடைசியா ஒன்று சொல்றேன்..

வேட்டைக்காரனில் விஜய் சிக்ஸ் பேக்கில் வருகிறாராம்....

பா.விஜய் எழுதிய கவிதைகள் !!!


நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?

**********************

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !

**********************

உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

**********************

பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.

**********************

உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?

**********************

துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!

**********************

உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.

**********************

பா.விஜய் அவர்கள் எழுதிய 18 வயசுல என்ற புத்தகத்தில் எனக்குப் பிடித்த கவிதைகள் இவை...

கந்தகோட்டை’ விமர்சனம்

பெட்டிக்கடைகளிலும் கிடைக்கும் அளவிற்கு மலிவாகிவிட்ட மசாலா பார்முலாவில் காதல்,கத்தல், கத்தி எல்லாவற்றையும் கூட்டுவைத்து, ரசிகர்களின் கண்ணுக்கும் காதுக்கும் வேட்டு வைக்கும் படம்.ஹீரோ நகுலுக்கு காதலுக்கு சிகப்புக்கொடி காட்டும் வேலை என்றால் நாயகி பூர்னா, காதலர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் சேவையில் தீவிரம் காட்டுகிறார். இருவரும் காதலர்களாக மாறும்போது இடைவேளை வருமென்பது பச்ச புள்ளைகளுக்கும் தெரிந்த்துதானே! இதிலும் அது நடக்கிறது.நகுல் சொன்ன ஐ லவ் யூவுக்கு பதில் சொல்லாமல் பஸ் ஏறும் பூர்ணாவுக்கு ஊரில் ஒரு பிரச்சனை வருகிறது. காதலியை பார்ப்பதற்காக நாகர்கோயிலுக்கு போகும் நகுலுக்கு இது தெரியவர, அடுத்த நிமிஷத்திலிருந்து ஆரம்பமாகிறது வில்லனுடனான மோதல். கடைசியில் எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.நகுல் ஸ்டூடண்டா, வேலை தேடுபவரா என்ற எந்த விபரமும் தெரியாமலேயே கடைசிவரை கண்ணாமூச்சி காட்டியிருக்கும் இயக்குனரின் திறமை ‘பளிச்சிடுகிறது’. குறைந்த பட்சம் அவரும் அவரது நண்பர்களும் வெட்டி ஆபீசர்கள் என்பதை காட்டியிருந்தலாவது நிம்மதி இருந்திருக்கும்.நகுலின் சுறுசுறுப்பு, பாட்டுக்கும் பைட்டுக்கும் தோள் கொடுத்தாலும் முக பாவணைகளில் இயல்பு காணாமல்போவது மைனஸ். காமெடி பெயரில் கடித்துகுதறுகிறார் சந்தானம், அடிக்கடி ஜட்டி போட்டிருக்கியா? என்று கேட்பதெல்லாம் அபத்தம்.”டேய் வாடா வாடா.... என் கையாலதான் உனக்கு சாவு வாடா வாடா” என்று வில்லன் சம்பத் கத்தும்போதெல்லாம் காது ஜவ்வில் விழுகிறது ஓட்டை.ஹீரோவும் வில்லனும் மோதும்போது நாம இசையுடன் மோ’தினா’ என்ன என்று நினைத்திருப்பார்போல தினா. டகட டகட டகட என்று ஒரு பின்னணி கொடுத்திருக்காருங்க பாருங்க. படத்துல அதுவும் ஒரு வில்லனாக மிரட்டுகிறது. ‘கல கல கந்தகோட்டை’ பாட்டு குத்தாட்ட ப்ரியர்களுக்கு குஷி. நகுலின் குரலில்‘உன்னை காதலி என்று சொல்லவா’ பாடல் ரசிக்கலாம். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் ஆங்காங்கே அவுட்டாப் ஃபோக்கஸ்.

’கந்தகோட்டை’ நொந்தகோட்டை.

நான் ரசித்தவை...

பேச்சாளர் சுகி. சிவம் அவர்களின் தந்தையார் பெயர் அமரர் சுகி. சுப்பிரமணியம். ஒரு முறை அவருக்கு மாரடைப்பு வந்த பொழுது அவரை ஒரு மருத்துவமனையின் மாரடைப்பு பிரிவில் சேர்த்தார்கள். அங்கிருந்த நடுத்தர வயது மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் பரபரப்புடன் இறங்கினார். பதற்றமும், படபடப்பும் தொற்றிக் கொள்ள பம்பரமாய்ச் சுழன்றார். அவ்வப்போது செவிலித் தாய்களையும் திட்டினார்.

இவற்றையெல்லாம் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபடியே அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சுகி. சுப்ரமணியம் அவர்கள் அந்த மருத்துவரை அருகில் அழைத்து, “டாக்டர்! உங்களுக்கு வாழ வேண்டிய வயது. இவ்வளவு பதற்றப்படாதீர்கள். அது உங்களது நரம்பு மண்டலத்தைத் தாக்கி இதயத்தைப் பாதிக்கும். எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பரபரப்புக்கு ஆளாக வேண்டிய அவசியமேயில்லை. நான் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டேன்! ஆனால் உங்களுக்கு இன்னும் நிறைய அத்தியாயங்கள் உண்டு கவனமாயிருங்கள்” என்றார். இதைக் கேட்டதும் மருத்துவரின் கண்கள் கலங்கி விட்டன.

“என் மருத்துவத்துறையனுபவத்தில் இது வரைக்கும் இப்படிப்பட்ட மனிதரை நான் பார்தததேயில்லை, எல்லோரும் தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்றி விடும்படித்தான் என்னிடம் மன்றாடுவார்கள். ஆனால் மருத்துவனான என்னைப் பற்றி அக்கறை கொண்டு ‘உன்னைக் காப்பாற்றிக் கொள்’ என்று சொன்ன முதல் நோயாளியை இன்று தான் பார்க்கிறேன் என்று கூறி நெகிழ்ந்தார்.

பதறிய காரியம் சிதறும்!!!